திங்கள், 17 மார்ச், 2025

 

சத்திய வழிதான் வென்றிடுமே

 

உறங்கிக் கிடக்கும் விதைகள்

ஈரம் பட விழிக்குமே

 

அடிமைநிலை புரியும் போது

புரட்சி வெடிக்குமே

 

அச்சப்பட்ட பாதங்கள்

எப்படி ஆற்றைக்கடக்குமோ

 

துன்பப்பட்டு இருந்ததால்

கண்ணில் நீரே பிறக்குமே

 

தெளிவு கொண்டு எழுந்தால்

விடியல் தொடங்குமே

 

ஏமாற்றப்பட்ட இடத்தில்

கை ஏந்துதல் முறையோ

 

எதற்கும் துணிவது தான்

வாழ்வின் வழியோ

 

பதுங்கி வாழ்வது

புலியின் குணமோ

 

பகை தீர்த்து எழுவதும்

அதனின் வழியோ

 

ஊரே ஒன்றுபட்டால்

சரியும் முடியே

 

உழைக்கும் கரங்கள்தானே

எதிர்கால ஒளியே

 

 

வாடிக் இருப்பது

மகிழ்ச்சி இல்லையே

 

வளம் சேர்க்க

எழுவது காலக்கடனே

 

நாளை என்பது தாமதமே

இன்றுதான் மிக அருகினிலே

 

வெற்றியோ தோல்வியோ

தொடங்குங்களே

 

புத்தியில் நிறைந்த

அறிவுடனே

 

சத்திய வழிதான்

வென்றிடுமே

                                                                                           வட்டக்கச்சி வினோத்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  அதிசயம் என்னவென்றால் இந்தப் பூமி அசையாமல் சுற்றவைத்தது யாரு சாமி ஆதியும் அந்தமும் ஆனது தூசி ஆதாரம் உயிருக்கு காற்றே சாட்...